ban2 1762774731
உலகம்செய்திகள்

சிறுவர்களுக்குச் சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு அவுஸ்திரேலியா: 16 வயதிற்குட்பட்டோர் கணக்குகள் நீக்க உத்தரவு!

Share

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது. அங்கு தற்போது நள்ளிரவைக் கடந்துள்ள நிலையில், இந்தத் தடை அமலுக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் மன மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த வருடம் ‘இணையவழி பாதுகாப்பு திருத்தச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது.

சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிப்பதால், குழந்தைகளின் மனம், உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்திருந்தார்.

இந்தச் சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ், யூடியூப், ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் சமூக ஊடக நிறுவனங்களுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:

16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளை நீக்க, ‘டிக்டொக், எக்ஸ், மெட்டா (Facebook, Instagram)’ ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடையை மீறும் நிறுவனங்களுக்கு, ரூ. 297 கோடி வரை (அவுஸ்திரேலிய மதிப்பில்) அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சுமார் ஐந்து மில்லியன் குழந்தைகளும், 10 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...