கனடா பிரதமர் மீது கல்வீச்சு!
ஒன்டாரியோ பிராந்தியத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அவர் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி கனடாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தனது பிரசார பஸ்ஸில் கனடா பிரதமர் திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த பஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.