rtjy 223 scaled
உலகம்செய்திகள்

செங்கடலில் பயணித்த கப்பலுக்கு தாக்குதல்

Share

செங்கடலில் பயணித்த கப்பலுக்கு தாக்குதல்

செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி வந்த பல தாக்குதல் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யெமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பே ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குறிப்பட்டுள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல் செங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆளில்லா விமானத் தாக்குதலால் கப்பலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடலில் ஹவுதி பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் ஜப்பானிய சரக்குக் கப்பலை (Galaxy leader) ஹவுதி பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இந்நிலையில் கடத்திச்செல்லப்பட்ட கப்பலையும் அதன் பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...