24 663af940b3594
உலகம்செய்திகள்

உலக சந்தையில் இருந்து தமது தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராசெனெகா

Share

உலக சந்தையில் இருந்து தமது தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராசெனெகா

உலகம் முழுவதும் உள்ள சந்தைகளிலிருந்து ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனெகா (Oxford-AstraZeneca Covid ) தடுப்பூசி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நிறுவனம், நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ள நிலையிலேயே நேற்று (08.05.2024) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிறுவனம் தானாக முன்வந்து அதன் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றதன் பின், தடுப்பூசியை இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union) பயன்படுத்த முடியாது.

முன்னதாக தடுப்பூசியை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 05ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று முதல் திரும்பப்பெறும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.

எனினும், வணிக காரணங்களுக்காக இந்த தடுப்பூசி சந்தைகளில் இருந்து அகற்றப்படுவதாக அஸ்ட்ராசெனெகா தெரிவித்துள்ளது.

குறிப்பாக தொற்றுநோய்க்குப் பின்னர் கிடைக்கக்கூடிய புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளின் உபரி காரணமாகவே தமது தடுப்பூசிகளை உலகளவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், அஸ்ட்ராசெனெகா மீது 50இற்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பிரித்தானிய உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது இரத்த உறைவு மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை குறைத்தலை இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...