44523013 ustrumpone33
உலகம்செய்திகள்

ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது!

Share

தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார்.

மாநாடு முடிந்த மறுநாள், அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி, டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) முதலில் மலேசியா செல்வார் என்றும், அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென் கொரியா செல்ல இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது டிரம்ப்பும் ஜின்பிங்கும் பல்வேறு முக்கியப் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேச உள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...