44523013 ustrumpone33
உலகம்செய்திகள்

ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது!

Share

தென் கொரியாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார்.

மாநாடு முடிந்த மறுநாள், அதாவது அக்டோபர் 30-ஆம் தேதி, டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜின்பிங்கைச் சந்தித்துப் பேச இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) முதலில் மலேசியா செல்வார் என்றும், அதன்பிறகு ஜப்பான் மற்றும் தென் கொரியா செல்ல இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேச இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது டிரம்ப்பும் ஜின்பிங்கும் பல்வேறு முக்கியப் பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேச உள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே படுகொலை! – நாட்டின் பாதுகாப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் பகல் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது, நாட்டின்...

fbe3c1ad sltb 850x460 acf cropped
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை போக்குவரத்து சபையில் நாளை முதல் பதவி உயர்வு! – 350-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முடங்கும் அபாயம்!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தனது ஊழியர்களின் தகுதிகளை மறுபரிசீலனை செய்து, அவர்களுக்கு முறையான உத்தியோகபூர்வ...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...