உலகம்செய்திகள்

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

tamilni 370 scaled
Share

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி ஒருவர் பதவியேற்கும் முன்பே, அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், மக்கள் புலம்பெயர்தலை எதிர்க்கும் வலதுசாரிக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதைக் காட்டின.

அதனால், ஜேர்மன் அரசியலில் பெரும் அதிர்வலைகள் உருவாகின. ஆளுங்கட்சியினரே, புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கைகளைத் துவங்க இருப்பதாக அறிவிக்கவேண்டிய ஒரு கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்
இந்நிலையில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றவரான வலதுசாரிக் கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The Alternative for Germany Party (AfD) என்னும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவரான Daniel Halemba (22) என்னும் அரசியல்வாதிக்கு எதிராகத்தான் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதற்காக அவருக்கு எதிராக கைது வாரண்ட் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. அவர் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை, சரணடையவும் இல்லை.

இன்னொரு விடயம் என்னவென்றால், அமைச்சர்கள் தண்டனை போன்ற விடயங்களிலிருந்து தப்பமுடிவும். ஆனால், Daniel இன்னமும் அமைச்சராக பதவியேற்கவில்லை. ஆகவே, அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வாரா, அல்லது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...