4 12 scaled
உலகம்செய்திகள்

டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா..! துள்ளாட்டம் போட்ட புதிய பிரதமர்

Share

டொலர் தேசமாக மாற இருக்கும் அர்ஜென்டினா..! துள்ளாட்டம் போட்ட புதிய பிரதமர்

அர்ஜென்டினாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேவியர் மிலி தனது வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

அர்ஜென்டினா நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி லிபர்டி கட்சியை சேர்ந்த ஜேவியர் மிலி வெற்றி பெற்று நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல்படி ஜேவியர் மிலி 56 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் தனது வெற்றியை அர்ஜென்டினா நாட்டின் புதிய பிரதமர் துள்ளல் ஆட்டம் போட்டு கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜேவியர் மிலி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து அர்ஜென்டினாவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் ஜேவியர் மிலி தனது தேர்தல் வாக்குறுதியில் இரண்டு முக்கிய உறுதியை வழங்கி இருந்தார், அதில் முதலாவது அர்ஜென்டினா இனி டொலர் தேசம், மற்றொன்று மத்திய வங்கி நீக்கம்.

அர்ஜென்டினாவின் தற்போதைய பணவீக்கம் 142 சதவீதமாக இருக்கும் நிலையில், அர்ஜென்டினாவின் பீசோ நாணயத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டு அமெரிக்க டொலரை அதிகாரப்பூர்வ பணமாக ஜேவியர் மிலி அறிவிக்கயுள்ளார்.

இவை அர்ஜென்டினாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

மேலும் அர்ஜென்டினாவை டொலர் தேசமாக மாற்ற அந்த நாட்டின் மத்திய வங்கியை மூடுவதாகவும் ஜேவியர் மிலி தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...