24 668548958a6e4
உலகம்செய்திகள்

ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்! 3 நாட்கள் விழாவில் என்ன நடக்க போகிறது?

Share

ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்! 3 நாட்கள் விழாவில் என்ன நடக்க போகிறது?

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண அட்டவணையை பார்க்கலாம்.

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நேற்று முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

அப்போது ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி, திருமண மோதிரங்கள் மற்றும் மூக்குத்தி, மற்றும் வெள்ளி ஆபரணங்கள், கால் மோதிரங்கள் ஆகிய பரிசுகளை வழங்கினர்.

ஜூலை 12
இந்த நாளானது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் மங்களகரமான சுப விழா அல்லது திருமண விழாவுடன் தொடங்கும். அன்று நடைபெறும் திருமண விழாவிற்கு விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜூலை 13
இந்த நாளில் தெய்வீக ஆசீர்வாத விழா நடைபெறும். இந்திய முறையான ஆடைக் குறியீடு இருக்கும் இடத்தில் நடைபெறும்.

ஜூலை 14
இந்த நாளில் மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு நடைபெறும். அங்கு ஆடை குறியீடு இந்திய சிக் தீம் ஆகும்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....