21 18
உலகம்செய்திகள்

அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல்

Share

அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல்

இலங்கைக்கு அமெரிக்கர்கள் வருவதற்கு பயணத் தடை ஏதும் இல்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், பிரான்ஸ், இத்தாலி போன்ற பிரபலமான இடங்களைப் போலவே, இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசனையும் 2ஆவது நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

2024, ஒக்டோபர் 23ஆம் திகதி அன்று, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அறுகம்குடாவில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பகமான தகவல் காரணமாக, அதன் பணியாளர்களுக்கான பயணத்தைத் தடை செய்தது.

 

அறுகம்குடா பகுதியில் ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் இருப்பதை அறிந்ததும், இந்த அறியப்பட்ட விபரங்களை, தாம் இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக சங் தெரிவித்துள்ளார்.

 

இதன் அடிப்படையில், இலங்கையின் அரச அதிகாரிகள் விரைவாக பதிலளித்தனர். இந்தநிலையில், இலங்கையுடனான கூட்டாண்மையை தமது நாடு மதிப்பதாக ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை, இலங்கையின் தலைமை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

கடந்த வார பாதுகாப்பு எச்சரிக்கை அடிப்படையில், அமெரிக்கர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை அறுகம் விரிகுடாவைத் தவிர்க்க வேண்டும்.

 

இருப்பினும், இலங்கைக்கான அவர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆலோசனைகள் பல ஆண்டுகளாக நிலை 2இல் உள்ளன.

மாலைத்தீவு, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளைப் போலவே இலங்கையும் இன்னும் 2ஆம் நிலை ஆலோசனையிலேயே உள்ளது என்றும் அமெரிக்கா தூதுவர் ஜூலை சங் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...