6 3
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் உள்ளக நிர்வாகத்தில் முதல் சறுக்கல்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ்(Michael Waltz) தனது பணியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.

இது, 2025 ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது உள்ளக அரசியலில் ஏற்பட்ட முதல் பெரிய மாற்றமாகும்.

வோல்ட்ஸின் துணை அதிகாரியும், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் வட கொரியாவை மையமாகக் கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரியுமான ஆசிய நிபுணருமான அலெக்ஸ் வோங்கும் தனது பதவியை விட்டு விலகுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த 51 வயதான முன்னாள் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான வோல்ட்ஸ், கடந்த மார்ச் மாதத்தில் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு உதவியாளர்களிடையே, ஊழல் ஒன்றில் சிக்கிய நிலையில், வெள்ளை மாளிகைக்குள் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த நிலையில் வோல்ட்ஸிடமிருந்து அந்த பதவியை யார் பொறுப்பேற்பார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், ரஸ்யா- உக்ரைன் ராஜதந்திரத்திலும் மத்திய கிழக்கிலும் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒரு சக்திவாய்ந்த பதவியாகும் எனினும், அந்த பதவிக்கு செனட் உறுதிப்படுத்தல் அவசியம் இல்லை.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...