6 3
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் உள்ளக நிர்வாகத்தில் முதல் சறுக்கல்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ்(Michael Waltz) தனது பணியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.

இது, 2025 ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது உள்ளக அரசியலில் ஏற்பட்ட முதல் பெரிய மாற்றமாகும்.

வோல்ட்ஸின் துணை அதிகாரியும், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் வட கொரியாவை மையமாகக் கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரியுமான ஆசிய நிபுணருமான அலெக்ஸ் வோங்கும் தனது பதவியை விட்டு விலகுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த 51 வயதான முன்னாள் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான வோல்ட்ஸ், கடந்த மார்ச் மாதத்தில் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு உதவியாளர்களிடையே, ஊழல் ஒன்றில் சிக்கிய நிலையில், வெள்ளை மாளிகைக்குள் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த நிலையில் வோல்ட்ஸிடமிருந்து அந்த பதவியை யார் பொறுப்பேற்பார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், ரஸ்யா- உக்ரைன் ராஜதந்திரத்திலும் மத்திய கிழக்கிலும் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒரு சக்திவாய்ந்த பதவியாகும் எனினும், அந்த பதவிக்கு செனட் உறுதிப்படுத்தல் அவசியம் இல்லை.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...