24 662aa57d2b9aa
உலகம்செய்திகள்

ரஷ்யா – உக்ரைன் போர் – இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா

Share

ரஷ்யா – உக்ரைன் போர் – இரகசிய தகவலொன்றை அம்பலப்படுத்திய அமெரிக்கா

ரஷ்ய-உக்ரைன் போரை சூடுபடுத்தும் வகையில் அமெரிக்கா ஒரு சிறப்புத் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரகசியமாக வழங்கியதை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மார்ச் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அங்கீகரிக்கப்பட்ட $300 மில்லியன் டொலர்கள் (£240m) உதவிப் பொதியின் ஒரு பகுதியாகவும் இந்த ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நீண்ட தூர ஏவுகணைகளின் முதல் தாக்குதல் கிரிமியாவில் உள்ள ரஷ்ய இலக்குகளை ஒரு முறையாவது தாக்கியுள்ளதாக அமெரிக்கா தற்போது வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீண்ட தூர ஏவுகணைகளில் ஒன்று 300 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை உக்ரைனுக்கான புதிய 61 பில்லியன் டாலர் உதவிப் பொதியில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கையெழுத்திட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...