tamilnaadid 4 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு

Share

ரூ.451 கோடி விலையுயர்ந்த நெக்லஸ்! மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு அம்பானி வழங்கிய பரிசு

முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தங்களது வருங்கால மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார தம்பதிகள் வழங்கிய பிரம்மாண்ட பரிசுகள் குறித்து பார்ப்போம்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும், Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின்(Mukesh Ambani) இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும்(Anant Ambani ), தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும்(Radhika Merchant ) ஜனவரி 2023ல் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களது திருமணம் ஜூலை 12ம் திகதி மும்பையில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது, இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பே இவர்களது திருமண கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.

சமீபத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் இருக்கும் அம்பானி பண்ணை வீட்டில் ‘லகன் லக்வான்’ என்ற விழா நடைபெற்று முடிந்தது, மேலும் இது தொடர்பான புகைப்படங்களை மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

இவர்களது விரிவான திருமண கொண்டாட்டங்கள் மார்ச் 1ம் திகதி முதல் விரிவாக தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியும், நிதா அம்பானியும்(Nita Ambani) தங்களது மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின்(Akash Ambani) மனைவியும், தங்கள் முதல் மருமகளுமான ஷ்லோகா மேத்தாவுக்கு(Shloka Mehta) ரூ.451 கோடி மதிப்புள்ள Mouawad L’Incomparable என்ற உலகின் விலையுயர்ந்த நெக்லஸை பரிசு அளித்து இருந்தார்.

இந்நிலையில் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் மனைவியும், நிதா அம்பானியின் நெருங்கிய வருங்கால மருமகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு இந்தியாவின் பணக்கார தம்பதிகள் வழங்கிய பரிசு குறித்த ஆர்வம் மக்களை சீண்டியுள்ளது.

ராதிகாவை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்கும் விதமாக இரண்டு வெள்ளி துளசி பானைகள், ஒரு வெள்ளி தூபக் குச்சி மற்றும் ஒரு லட்சுமி-கணேஷ் சிலை ஆகியவற்றை உள்ளடக்கிய வெள்ளி பரிசு பெட்டகத்துடன் நிதா அம்பானி வரவேற்று இருந்தார்.

அத்துடன் நிச்சியதார்த்ததின் அன்று ஆனந்த அம்பானி-ராதிகா மெரச்சன்ட் ஜோடிக்கு சுமார் 4.5 கோடி மதிப்பிலான Bentley Continental GTC சொகுசு காரை பரிசாக அம்பானி தம்பதி வழங்கியது.

மேலும் நிதா அம்பானி தன்னுடைய பல கோடி மதிப்பிலான அழகான முத்து மற்றும் வைர ஆபரண நகையை(beautiful pearl and diamond choker) வருங்கால மருமகள் ராதிகா மெரச்சன்ட்டுக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த நெக்லஸை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது நிதா அம்பானி அணிந்து வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...