8 10
உலகம்செய்திகள்

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

Share

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

உலக நீர் வளங்களின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கவலையளிக்கும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் உலகின் பெரும்பாலான உயிர்நாடிகளில் நீர் ஓட்டத்தின் அளவு பாரிய அளவில் சரிவைக் கண்டதாக அறிக்கை கூறியுள்ளது.

33 ஆண்டுகால தரவுகளை பகுப்பாய்வு செய்யும் “உலகளாவிய நீர் வளங்களின் நிலை” அறிக்கை, முக்கிய நதிப் படுகைகளில் நீடித்த வறட்சியின் கடுமையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

உலகின் மிகப்பாரிய ஆறுகளான அமேசான் மற்றும் மிசிசிப்பி படுகைகளில் கடந்த ஆண்டு குறைந்த நீர் வரத்து இருந்தது.

இந்தியாவில் கங்கை மற்றும் மீகாங் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நீர் ஓட்டம் குறைவாக உள்ளது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் வழக்கத்திற்கு மாறான தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஆறுகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த நிலைமை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் கிடைப்பதை குறைத்துள்ளது என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...