8 10
உலகம்செய்திகள்

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

Share

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

உலக நீர் வளங்களின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கவலையளிக்கும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் உலகின் பெரும்பாலான உயிர்நாடிகளில் நீர் ஓட்டத்தின் அளவு பாரிய அளவில் சரிவைக் கண்டதாக அறிக்கை கூறியுள்ளது.

33 ஆண்டுகால தரவுகளை பகுப்பாய்வு செய்யும் “உலகளாவிய நீர் வளங்களின் நிலை” அறிக்கை, முக்கிய நதிப் படுகைகளில் நீடித்த வறட்சியின் கடுமையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

உலகின் மிகப்பாரிய ஆறுகளான அமேசான் மற்றும் மிசிசிப்பி படுகைகளில் கடந்த ஆண்டு குறைந்த நீர் வரத்து இருந்தது.

இந்தியாவில் கங்கை மற்றும் மீகாங் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நீர் ஓட்டம் குறைவாக உள்ளது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் வழக்கத்திற்கு மாறான தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஆறுகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த நிலைமை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் கிடைப்பதை குறைத்துள்ளது என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...