உலகம்செய்திகள்

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

Share
8 10
Share

வறண்டுவரும் அமேசான், மிசிசிப்பி நதிகள்., கவலையளிக்கும் உண்மையை வெளியிட்ட ஐ.நா.

உலக நீர் வளங்களின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கவலையளிக்கும் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் உலகின் பெரும்பாலான உயிர்நாடிகளில் நீர் ஓட்டத்தின் அளவு பாரிய அளவில் சரிவைக் கண்டதாக அறிக்கை கூறியுள்ளது.

33 ஆண்டுகால தரவுகளை பகுப்பாய்வு செய்யும் “உலகளாவிய நீர் வளங்களின் நிலை” அறிக்கை, முக்கிய நதிப் படுகைகளில் நீடித்த வறட்சியின் கடுமையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

உலகின் மிகப்பாரிய ஆறுகளான அமேசான் மற்றும் மிசிசிப்பி படுகைகளில் கடந்த ஆண்டு குறைந்த நீர் வரத்து இருந்தது.

இந்தியாவில் கங்கை மற்றும் மீகாங் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நீர் ஓட்டம் குறைவாக உள்ளது. உலகின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் வழக்கத்திற்கு மாறான தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஆறுகளில் நீரோட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த நிலைமை விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் கிடைப்பதை குறைத்துள்ளது என்று அறிக்கை எச்சரித்துள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...