16 24
உலகம்செய்திகள்

பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எளிதாக நுழைய நிதி ஒதுக்கீடு

Share

பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எளிதாக நுழைய நிதி ஒதுக்கீடு

பிரித்தானிய மக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் எளிதாக நுழைய 10.5 மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய அரசு, Brexit-க்கு பிறகு ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பிரித்தானிய குடிமக்கள் செல்வதை எளிதாக்கவும், ஆவண சோதனைகளை சீராக்கவும் 10.5 மில்லியன் பவுண்டுகளை செலவிடவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இம்மே மாதத்தில் இருந்து புதிய நுழைவு மற்றும் வெளியேறும் முறைமையை (Entry and Exit System – EES) அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம், பிரித்தானிய பயணிகள் தங்கள் முகம் மற்றும் விரல் ரேகையை ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.

இந்த முறைமையை நடைமுறைப்படுத்த, பிரித்தானிய அரசு முக்கியமான துறைமுகங்களில் தொழில்நுட்ப மேம்பாடுகளைச் செய்யவுள்ளது.

மேலும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், புதிய சோதனைகளுக்காக நியமனம், பயிற்சி ஆகியவற்றை செய்து கொண்டு வருகிறது.

டோவர் துறைமுகம், புல்க்ஸ்டோனில் உள்ள யூரோடன்னல் மற்றும் லண்டனில் உள்ள செயின்ட் பான்கிரஸ் ஸ்டேஷன் ஆகியவற்றில் 3.5 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது பிரித்தானியா 2016ல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற தீர்மானித்ததைத் தொடர்ந்து, புதிய விதிமுறைகள் மற்றும் சோதனைகளை முன் பார்த்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...