22
உலகம்செய்திகள்

பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

Share

பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

பிரித்தானியாவின் புலம்பெயர்தல் யுக்தி, தவறான முறைக்கு உட்படுத்தப்படும் அபாயத்தை அதிகரிக்கிறது என தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

புலம்பெயர்ந்தோர் தொடர்பில் சிறையில் அடைத்தல் மற்றும் ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துதல் என்னும் பிரித்தானியாவின் புலம்பெயர்தல் கொள்கையால், அவர்கள் தலைமறைவாகும் நிலை ஏற்படலாம் என தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன.

அத்துடன், அவர்கள் தவறான முறைக்கு உட்படுத்தப்படும் அபாயமும் அதிகரிக்கிறது என தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன.

பிரித்தானியாவில், சுமார் 275 வீடுகளில் சட்ட விரோத புலம்பெயர்தல் தொடர்பில் ஒரு வார காலத்துக்கு சோதனை நடத்தியதாக இம்மாதம் 27ஆம் திகதி உள்துறை அலுவலகம் தெரிவித்தது.

இந்நிலையில் , 85 சட்ட விரோதப் பணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

200க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டார்கள். ஆக, இப்படி புலம்பெயர்தோரைக் குறிவைத்து எடுக்கும் நடவடிக்கைகளால் உருவாகும் அச்சத்தால், அவர்கள் தலைமறைவாகவும், பணி வழங்குவோர் மற்றும் ஆட்கடத்தல்காரர்களால் தவறான முறைக்கு உட்படுத்தப்படவும் வழிவகை ஏற்படலாம் என 80க்கும் அதிகமான தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளன.

அத்துடன், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரின் நிலையை முறைப்படுத்துவதற்கான வழிமுறையை எளிதாக்குமாறு அவர்கள் உள்துறைச் செயலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Share
தொடர்புடையது
19 5
உலகம்செய்திகள்

உக்ரைன் நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்: குடியிருப்பு பகுதிகள் குறி..கெர்சன் குற்றச்சாட்டு

உக்ரைனின் தெற்கு நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு உக்ரைன்...

18 5
உலகம்செய்திகள்

போருக்கு மத்தியில்… ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்த கிழக்காசிய நாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலுக்கு முன்னர் ஏற்றுமதிகள் துரிதப்படுத்தப்பட்டதால், ஜூன் மாதத்தில் ஈரானில் இருந்து...

16 7
உலகம்செய்திகள்

பிரான்ஸ் விமான விபத்து: முன்னாள் ராணுவ தளபதி, தம்பதியர் பலி

பிரான்சில் நிகழ்ந்த விமான விபத்தொன்றில், முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் மற்றும் ஒரு தம்பதியர் என...

15 7
இலங்கைசெய்திகள்

கொழும்பு டொக்கியார்ட்டின் பங்குகளை வாங்கப்போகும் இந்திய நிறுவனம்

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.எல் என்ற மசகான் டொக் ஷசிப் பில்டர்ஸ், கொழும்பு டொக்கியார்ட் பி.எல்.சியின்...