atr 1704884996
உலகம்செய்திகள்

விஜய்யுடன் இணைந்து நடிக்கலாம், ஆனால் இதெல்லாம் நடக்கனுமே- அஜித் கூறிய விஷயம்

Share

விஜய்யுடன் இணைந்து நடிக்கலாம், ஆனால் இதெல்லாம் நடக்கனுமே- அஜித் கூறிய விஷயம்

அஜித்-விஜய் தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் நடிகர்கள்.

விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிந்துள்ளதாக தெரிகிறது.

அதேபோல் அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு அஜர்பைஜானில் இதுவரை நடந்து வர அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை திரும்பியுள்ளனர்.

தனித்தனியாக இவர்கள் படங்கள் நடித்தாலே மாஸாக இருக்கிறதே ஒன்றாக நடித்தால் இப்போது எப்படி இருக்கும் என்ற கனவு ரசிகர்களிடம் உள்ளது தான், ஆனால் அது நடப்பதற்கு தான் எந்த வழியும் தெரியவில்லை.

ரசிகர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவது போல் அஜித்-விஜய்க்கு இருக்கும் என கூறப்படுகிறது.

மங்காத்தா படத்தை பார்த்துவிட்டு அர்ஜுன் ரோலில் என்னை கேட்டிருந்தால் நான் நடித்திருப்பேனே என விஜய்யை வெங்கட் பிரபுவிடம் கேட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.

இந்த நேரத்தில் தான் விஜய்யுடன் நடிப்பது குறித்து அஜித் பேசிய பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அஜித் கூறியதாவது, விஜய்யுடன் இணைந்து நான் நடிப்பதற்கு முதலில் என்னுடைய ரசிகர்கள் ஆசைப்பட வேண்டும்.

இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்படி கதை அமைய வேண்டும். அந்தக் கதை நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்தால் நான் கண்டிப்பாக விஜய்யுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...