பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தான் தடுக்கத் தவறிவிட்டது: லஷ்கர் தலைவர் எச்சரிக்கை!

44527896 afkanistan33

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் ஆப்கானிஸ்தான் தவறிவிட்டது என்று லஷ்கர் அமைப்பின் மூத்த தலைவர் யாகூப் ஷேக் தெரிவித்துள்ளார். அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தமது மண்ணைப் பயன்படுத்த ஆப்கானிஸ்தானுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்கள் இனி ஒரு குண்டைக்கூட பாகிஸ்தான் நோக்கிப் பிரயோகிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

“பாகிஸ்தான் எங்களுக்கு முக்கியம், பாகிஸ்தானுக்காகப் போராடுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நாட்டிற்கும் எதிராகத் தீவிரவாதத்திற்காக ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் எச்சரித்தார். ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் பாதுகாப்பிற்காக எந்த நடவடிக்கையையும் எடுக்க உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் தலிபானும் தங்கள் மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் தொடங்கப்படாது என்று உறுதியளித்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் “புதிய உச்சத்தை” எட்ட முடியும் என்று யாகூப் ஷேக் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version