maxresdefault scaled
உலகம்செய்திகள்

நிவாரண உதவி வழங்கும் போது மயங்கி விழுந்த நடிகர் டி.ராஜேந்தர்: அதிர்ச்சி சம்பவம்

Share

நிவாரண உதவி வழங்கும் பொழுது நடிகர் டி.ராஜேந்தர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தனர். வீடுகள், விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

இன்று நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜய் 1,500 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். அதேபோல், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரும் இன்று தூத்துக்குடியில் நிவாரண உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது, திடீரென மயக்கம் அடைந்து சரிந்து விழுந்தார். இதனால், பதற்றமான அவரது ரசிகர்கள், டி.ஆரை அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து, அவரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...