4 44 scaled
உலகம்செய்திகள்

உயிருக்கு அச்சுறுத்தல்… கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

Share

உயிருக்கு அச்சுறுத்தல்… கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் முன்னெடுத்துவந்த வாக்கெடுப்பு பிரச்சாரத்தை தற்போது நடத்திவரும் சமூக ஆர்வலரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

ஒன்ராறியோவின் பிராம்டனில் குடியிருந்து வருபவர் சமூக ஆர்வலராக இந்தர்ஜித் சிங் கோசல். இவரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் ஒன்ராறியோ மாகாண பொலிசார் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளனர்.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பொலிசார் அவரது குடியிருப்புக்கு சென்ற போது அவர் அங்கே இல்லை என்பதால், அலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்துள்ளனர்.

மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவம் நடந்தால் பொலிசாரை நாடவும் கோரியுள்ளனர். இந்த விவகாரம் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கோசல் தெரிவித்துள்ளார்.

35 வயதான இந்தர்ஜித் சிங் கோசல், இந்தியாவின் சீக்கியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தை இரண்டாக பிரித்து காலிஸ்தான் சுதந்திரம் தொடர்பாக கனடா முழுவதும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கோசல் ஏற்றெடுத்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரிடையான தொடர்பிருப்பதாக 2023 ஜூன் 18ம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.

காலிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் இந்திய அரசாங்கம், நிஜ்ஜரை தீவிரவாதி என அடையாளப்படுத்தியது. இந்த நிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட காரணம் இந்தியா என்றே தாம் நம்புவதாக கோசல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கியர்களை ஒருங்கிணைப்பதில் இந்தியாவுக்கு என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியுள்ள கோசல், கனடா போன்ற ஒரு அழகான நாட்டில் தாம் பாதுகாப்பாக இருப்பேன் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...