4 44 scaled
உலகம்செய்திகள்

உயிருக்கு அச்சுறுத்தல்… கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

Share

உயிருக்கு அச்சுறுத்தல்… கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் முன்னெடுத்துவந்த வாக்கெடுப்பு பிரச்சாரத்தை தற்போது நடத்திவரும் சமூக ஆர்வலரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

ஒன்ராறியோவின் பிராம்டனில் குடியிருந்து வருபவர் சமூக ஆர்வலராக இந்தர்ஜித் சிங் கோசல். இவரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் ஒன்ராறியோ மாகாண பொலிசார் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளனர்.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பொலிசார் அவரது குடியிருப்புக்கு சென்ற போது அவர் அங்கே இல்லை என்பதால், அலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்துள்ளனர்.

மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவம் நடந்தால் பொலிசாரை நாடவும் கோரியுள்ளனர். இந்த விவகாரம் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கோசல் தெரிவித்துள்ளார்.

35 வயதான இந்தர்ஜித் சிங் கோசல், இந்தியாவின் சீக்கியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தை இரண்டாக பிரித்து காலிஸ்தான் சுதந்திரம் தொடர்பாக கனடா முழுவதும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கோசல் ஏற்றெடுத்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரிடையான தொடர்பிருப்பதாக 2023 ஜூன் 18ம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.

காலிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் இந்திய அரசாங்கம், நிஜ்ஜரை தீவிரவாதி என அடையாளப்படுத்தியது. இந்த நிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட காரணம் இந்தியா என்றே தாம் நம்புவதாக கோசல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கியர்களை ஒருங்கிணைப்பதில் இந்தியாவுக்கு என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியுள்ள கோசல், கனடா போன்ற ஒரு அழகான நாட்டில் தாம் பாதுகாப்பாக இருப்பேன் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...