4 44 scaled
உலகம்செய்திகள்

உயிருக்கு அச்சுறுத்தல்… கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

Share

உயிருக்கு அச்சுறுத்தல்… கனடாவில் சீக்கிய சமூக ஆர்வலருக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்

கனடாவில் கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் முன்னெடுத்துவந்த வாக்கெடுப்பு பிரச்சாரத்தை தற்போது நடத்திவரும் சமூக ஆர்வலரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர்.

ஒன்ராறியோவின் பிராம்டனில் குடியிருந்து வருபவர் சமூக ஆர்வலராக இந்தர்ஜித் சிங் கோசல். இவரை வெள்ளிக்கிழமை நள்ளிரவு கடந்த நிலையில் ஒன்ராறியோ மாகாண பொலிசார் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளனர்.

அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதி செய்துள்ள அதிகாரிகள் நேரிடையாக சென்று எச்சரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பொலிசார் அவரது குடியிருப்புக்கு சென்ற போது அவர் அங்கே இல்லை என்பதால், அலைபேசியில் தொடர்புகொண்டு எச்சரித்துள்ளனர்.

மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவம் நடந்தால் பொலிசாரை நாடவும் கோரியுள்ளனர். இந்த விவகாரம் தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக கோசல் தெரிவித்துள்ளார்.

35 வயதான இந்தர்ஜித் சிங் கோசல், இந்தியாவின் சீக்கியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தை இரண்டாக பிரித்து காலிஸ்தான் சுதந்திரம் தொடர்பாக கனடா முழுவதும் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை கோசல் ஏற்றெடுத்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரிடையான தொடர்பிருப்பதாக 2023 ஜூன் 18ம் திகதி கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.

காலிஸ்தான் பிரிவினைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் இந்திய அரசாங்கம், நிஜ்ஜரை தீவிரவாதி என அடையாளப்படுத்தியது. இந்த நிலையில், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட காரணம் இந்தியா என்றே தாம் நம்புவதாக கோசல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் சீக்கியர்களை ஒருங்கிணைப்பதில் இந்தியாவுக்கு என்ன சிக்கல் என கேள்வி எழுப்பியுள்ள கோசல், கனடா போன்ற ஒரு அழகான நாட்டில் தாம் பாதுகாப்பாக இருப்பேன் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...