உலகம்செய்திகள்

ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து!

23 650eed8ea8ef2
Share

ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து!

திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலானது குஜராத் மாநிலத்தின் வால்சத் ரயில் நிலையத்தில் நின்று சென்றது.

அங்கிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே ரயிலின் ஜெனெரேட்டர் பெட்டியில் தீ பிடித்துள்ளது. ரயிலில் இருந்து தீ பரவுவதை பார்த்ததும் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும், ரயிலில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று செயல்படுத்தப்பட்டன.

இந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக, ரயிலில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

அதுமட்டுமல்லாமல், ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் கரண்ராஜ் வகெலாகூறியுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...