tamilni 234 scaled
உலகம்செய்திகள்

திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

Share

திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் மாதவன் (55). மண்டபம் ஒன்றின் உரிமையாளரான இவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், மாதவனின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

எதிர்பாராத தாக்குதலால் மாதவனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் மாதவன் தனது மனைவி, மகள் மற்றும் மாமியார் மீது தாக்குதல் நடந்ததைத் தடுத்துள்ளார்.

அப்போது அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் ஏற்பட்டதால் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தாக்குதல்தாரி தப்பியோடிய நிலையில், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தாக்கப்பட்ட மாதவனின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் மூவரில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாதவனின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதல்தாரியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...