உலகம்செய்திகள்

திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

Share
tamilni 234 scaled
Share

திடீரென வீட்டிற்குள் நுழைந்து பயங்கரமாக தாக்கிய நபர்! ஒருவர் பலி, மூவர் கவலைக்கிடம்

தமிழக மாவட்டம் திருவள்ளூரில் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் மாதவன் (55). மண்டபம் ஒன்றின் உரிமையாளரான இவர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், மாதவனின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளார்.

எதிர்பாராத தாக்குதலால் மாதவனின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் மாதவன் தனது மனைவி, மகள் மற்றும் மாமியார் மீது தாக்குதல் நடந்ததைத் தடுத்துள்ளார்.

அப்போது அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் ஏற்பட்டதால் மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தாக்குதல்தாரி தப்பியோடிய நிலையில், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் தாக்கப்பட்ட மாதவனின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் மூவரில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் மாதவனின் உடலைக் கைப்பற்றிய பொலிஸார், இந்த தாக்குதல் சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதல்தாரியை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...