fdd
உலகம்செய்திகள்

ஒரே குத்தில் இந்திய வம்சாவளியினரைக் கொன்ற நபர்: அதிரவைத்த சம்பவம்

Share

ஒரே குத்தில் இந்திய வம்சாவளியினரைக் கொன்ற நபர்: அதிரவைத்த சம்பவம்

அமெரிக்காவில், தங்கும் வசதிகொண்ட உணவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்த இந்திய வம்சாவளியினர் ஒருவரை, ஒரே குத்தில் கொன்றுள்ளார் ஒருவர்.

அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் அமைந்துள்ள உனவகம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்தவர் ஹேமந்த் மிஸ்த்ரி (59). ஹேமந்த், இந்தியாவிலுள்ள குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்.

கடந்த வார இறுதியில், உணவக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவரை வெளியே போகச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, எதிர்பாராத நேரத்தில் அந்த நபர் ஹேமந்த் முகத்தில் ஓங்கிக் குத்த, அப்படியே சரிந்து கீழே விழுந்துவிட்டார் ஹேமந்த். விழுந்தவர் எழவேயில்லை!

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையிலும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.40 மணியளவில் உயிரிழந்துவிட்டார் ஹேமந்த்.

ஹேமந்த் தாக்கப்படும் காட்சிகளை ஒருவர் வீடியோ எடுத்துள்ள நிலையில், தாக்குதல்தாரியைபொலிசார் விரைவாக கைது செய்துவிட்டார்கள்.

அவர் பெயர் ரிச்சர்ட் (41) என தெரியவந்துள்ளது. ரிச்சர்ட் மீது தாக்குதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹேமந்த் உயிரிழந்துவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு கொலைக்குற்றச்சாட்டாக மாற்றப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...