24 664ed618a0bbb
உலகம்செய்திகள்

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளவிருக்கும் ஒரு தரப்பினர்: சரிந்த விசா விண்ணப்பங்கள்

Share

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்ளவிருக்கும் ஒரு தரப்பினர்: சரிந்த விசா விண்ணப்பங்கள்

பிரித்தானிய அரசு, சுகாதாரப்பணியாளர் விசாக்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதைத் தொடர்ந்து, சுகாதாரப்பணியாளர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

பிரித்தானிய அரசு, சுகாதாரப்பணியாளர் விசாக்கள் தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், சுகாதாரப்பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர இயலாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, சுகாதாரப்பணியாளர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, சுகாதாரப்பணியாளர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை 76 சதவிகிதமும், அவர்களுடைய குடும்பத்தினரில் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 58 சதவிகிதமும் குறைந்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஏற்கனவே பிரித்தனியாவுக்கு வந்துவிட்டவர்கள் விசா விதிகளுக்கு உட்படும் வகையிலான புதிய வேலைகளை இரண்டு மாதங்களுக்குள் தேடிக்கொள்ளும் கட்டாய நிலை உருவாகியுள்ளது.

அப்படி வேலை தேடிக்கொள்ள இயலாத நிலையிலிருக்கும் பல இந்திய சுகாதாரப்பணியாளர்கள், தங்கள் குடும்பத்தினர் பிரித்தானியாவில் வாழும் நிலையிலும், நாடுகடத்தப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....