உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் பரவும் புதிய வகையான வைரஸ்

28 18
Share

பிரித்தானியாவில் பரவும் புதிய வகையான வைரஸ்

பிரித்தானியாவில் கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான ‘ப்ளூடங்’ (Bluetongue) என அழைக்கப்படும் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல எனினும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

பிரித்தானியாவின் நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ (Haddiscoe) என்ற இடத்தில் ஒரு ஆடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ப்ளூடங் வைரஸ் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இதனைத் தடுக்க 20 கிலோமீட்டர் கட்டுப்பாட்டு வட்டாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வருடத்தின் மே மாதத்தில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவும் ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

தற்போது, நெதர்லாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், லக்சம்பர்க், டென்மார்க் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.

ப்ளூடங் வைரஸின் அறிகுறிகளாக சிவந்த வீக்கம் கொண்ட நாக்கு, காய்ச்சல் மற்றும் பால் உற்பத்தி குறைவு போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

பிரித்தானியாவின் துணை முதன்மை கால்நடை மருத்துவர் எலே பிரவுன் (Ele Brown), விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அடிக்கடி சரிபார்த்து, சந்தேகமுள்ள நிலையிலேயே அறிக்கையிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸ், 2023 நவம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் பரவத் தொடங்கியதுடன் 2024 மார்ச் மாதத்திற்குள் 199 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...