24 66b7098b2c109
உலகம்செய்திகள்

ஈராக்கில் உருவாகியுள்ள புதிய சர்ச்சை

Share

ஈராக்கில் உருவாகியுள்ள புதிய சர்ச்சை

பெண் பிள்ளைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் பிள்ளைகளின்; திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சர்ச்சைக்குரிய யோசனை ஒன்று, ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, ஈராக்கில் திருமணம் செய்ய குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

இருப்பினும், ஈராக் நீதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட புதிய சட்டம், குடும்ப விடயங்களுக்கு மத விதிகளை பின்பற்றலாமா? அல்லது சிவில் நீதிமன்ற முறையை பின்பற்றலாமா? என்பதை மக்கள் தேர்வு செய்ய அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த மாற்றம் வாரிசுரிமை, விவாகரத்து மற்றும் குழந்தைப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒன்பது வயதுடைய சிறுமிகளுக்கும், 15 வயதுடைய சிறுவர்களும் திருமணம் செய்து கொள்ளலாம்.

இளவயது திருமணத்தால் பெண்கள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்துவது, இளம் வயதிலேயே கர்ப்பம் தரிப்பது, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் அபாயம் அதிகமாகும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், இந்த யோசனையை ஆதரிப்பவர்கள், இது இஸ்லாமிய சட்டத்தை மேலும் சீரானதாக மாற்றும் என்றும் இளம் பெண்களை தகாத உறவுகளிலிருந்து பாதுகாக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் குறித்த ஆதரவாளர்கள், குழந்தை திருமணத்தின் ஆபத்துகளை கவனிக்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.

இதற்கிடையில் யுனிசெஃப் கருத்துப்படி, ஈராக்கில் 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...