16 34
உலகம்செய்திகள்

முதியோர் இல்லத்தில் உருவான காதல்.., 4000 பேருக்கு விருந்து கொடுத்து அமோக திருமணம்

Share

முதியோர் இல்லத்தில் உருவான காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மாநிலமான அசாம், கோலாகட் மாவட்டத்தில் உள்ள போககாட் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பத்மேஸ்வர் கோலா (71). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனது 2 சகோதரர்களின் ஆதரவில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருடைய இரண்டு சகோதரர்களும் இறந்து விட்டதால் பெல்டோலா பகுதியிலுள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

அதேபோல், சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஜ்பூரை சேர்ந்தவர் ஜெயபிரபா (65). இவருக்கும் குடும்ப சூழ்நிலை காரணமாக இன்னும் திருமணமாகவில்லை. இவரும், கவுகாத்தியில் மத்காரியா பகுதியிலுள்ள பெண்களுக்கான முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த வருடம் மார்ச் மாதம் சந்தித்துள்ளனர். இதில், பத்மேஸ்வரருக்கு நல்ல குரல் வளம் இருப்பதால் இந்தி பாடல்களை அடிக்கடி பாடுவார். இது ஜெயபிரபாவுக்கு மிகவும் பிடிக்கவே, இருவரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்த விடயம், இரு முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு தெரியவரவே அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

பின்னர், இத்திருமணத்தை நடத்தி வைக்க மோனாலிசா சொசைட்டி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் விருப்பம் தெரிவித்தது. இதையடுத்து, இருவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து முறைப்படியே திருமண சடங்குகள் அனைத்தும் நடந்தன.

இது தொடர்பாக தொண்டு நிறுவனத்தின் நிர்வாகியான உத்பால் ஹர்சவர்தன் கூறுகையில், “பொது நிதியுதவியுடன் இந்த திருமணத்தை செய்து முடித்துள்ளோம். திருமணத்திற்கு வந்த 4000 பேருக்கு உணவு பரிமாறியுள்ளோம். அவர்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர்” என்றார்.

Share
தொடர்புடையது
Police 2
செய்திகள்இலங்கை

போதைப்பொருள் விவகாரம்: 500 பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை – பொலிஸ்மா அதிபர் அதிரடி அறிவிப்பு!

இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின்...

MediaFile 8
செய்திகள்உலகம்

மதுரோவை விட மோசமான நிலையைச் சந்திப்பீர்கள்: இடைக்கால ஜனாதிபதி டெல்சிக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

வெனிசுலாவின் தற்போதைய இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படாவிட்டால் மிகக்கடுமையான விளைவுகளைச் சந்திக்க...

images 2 3
செய்திகள்உலகம்

கைவிலங்குடன் நீதிமன்றத்தில் மதுரோ: அமெரிக்காவைப் பழிதீர்ப்போம் என மகன் ஆக்ரோஷ எச்சரிக்கை!

அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி...

25 693a84d09bd08 md
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பதுளை மாவட்டத்தில் கனமழை: நிலச்சரிவு அபாயம் குறித்து மாவட்டச் செயலாளர் அவசர எச்சரிக்கை!

ஊவா மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள...