images 6 1
உலகம்செய்திகள்

பணிக்கு திரும்பவுள்ள இளவரசி கேட் மிடில்டன்

Share

பணிக்கு திரும்பவுள்ள இளவரசி கேட் மிடில்டன்

இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டபின் மீண்டும் பணிக்குத் திரும்பவுள்ளதை உறுதி செய்யும் வகையில் இளவரசர் வில்லியம் (William, Prince of Wales), இளவரசி கேட் தம்பதியர் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் அறுவ சிகிச்சை ஒன்றிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசி கேட், பின்னர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்க, அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பிரித்தானிய மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

இளவரசி புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனது மாமனாரான மன்னர் சார்லசைப்போலவே, சிகிச்சையின் நடுவிலேயே பணிக்குத் திரும்ப அவரும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றிலிருந்து, விவசாயிகள், குறிப்பாக பண்ணை வைத்திருக்கும் இளம் விவசாயிகளின் மன நலம் தொடர்பிலான பணி ஒன்றிற்காக கேட் தனது கணவரான இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கேட்டின் உடல் நிலை குறித்து கவலையில் ஆழ்ந்துள்ள அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு, இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...