உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

Share

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

வெளிநாட்டவர்களைக் கவர ஜேர்மனி பல நடவடிக்கைகள் எடுத்துவருவது அனைவரும் அறிந்த விடயம்தான். ஆனால், ஜேர்மன் நகரம் ஒன்று ஒரு படி மேலே போய், வெளிநாட்டவர்களுக்காக பல நல்ல திட்டங்களை துவக்க தீவிரமாக முயன்றுவருவதாக வெளியாகியுள்ள செய்தி மனம் மகிழச் செய்வதாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்காக திட்டங்கள்
ஜேர்மனி ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு என்பதால். பிற ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் ஜேர்மனிக்கு வருவதில் பெரிய பிரச்சினைகள் இருக்கப்போவதில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களுக்கு சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜேர்மனி மட்டுமின்றி பல நாடுகள் தற்போது பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிவருகின்றன. ஆகவே, பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக மற்ற நாட்டுப் பணியாளர்களை வரவேற்க அவை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

ஜேர்மனியோ, அதற்காக புதிய சட்டம் உருவாக்கும் எல்லை வரை சென்றுவிட்டது.

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நடவடிக்கைகள்
அதையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட ஜேர்மன் நகரம், வெளிநாட்டவர்களுக்காக, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களை வரவேற்பதற்காக, பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

அப்படி வெளிநாட்டவர்களுக்காக திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள ஜேர்மன் நகரம் Munich.

ஆம், Munich நகர பசுமைக் கட்சியினர், ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டவர்களுக்காக ‘வரவேற்பு மையம்’ ஒன்றை உருவாக்க விரும்புகிறார்கள்.

அதாவது, சில நாடுகள், வெளிநாட்டவர்களை வரவேற்கின்றன. ஆனால், அவர்கள் வந்தபின்,

அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்கள் புதிய நாட்டில் அவர்களுக்குக் கடினமாக உள்ளன.

புது வாழ்வைத் துவக்கலாம் என சில நாடுகளுக்கு வந்த மக்கள், அமைதியாக தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்ற விடயங்களும் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, Munich நகருக்கு வரும் மக்கள் அப்படி எந்த பிரச்சினைகளையும் சந்திக்கக்கூடாது. அதாவது, அவர்கள் ஜேர்மனிக்கு வருவது மட்டுமல்ல, அங்கேயே மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழவேண்டும் என Munich நகர பசுமைக் கட்சியினர் விரும்புகிறார்கள்.

அபப்டியானால், ஜேர்மனிக்கு வருவோருக்கு, வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்களை எளிதாக்கவேண்டும், அதற்கு உதவவேண்டும் இல்லையா?

ஆகவே, அப்படி வெளிநாட்டவர்களுக்கு சகல உதவிகளையும் செய்யும் ஒரு வரவேற்பு மையத்தைத்தான் Munich நகர பசுமைக் கட்சியினர் உருவாக்க விரும்புகிறார்கள் என வெளியாகியுள்ள தகவல், பெருமகிழ்ச்சியை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...