உலகம்செய்திகள்

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

Share

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க விரும்பும் ஜேர்மன் நகரம்

வெளிநாட்டவர்களைக் கவர ஜேர்மனி பல நடவடிக்கைகள் எடுத்துவருவது அனைவரும் அறிந்த விடயம்தான். ஆனால், ஜேர்மன் நகரம் ஒன்று ஒரு படி மேலே போய், வெளிநாட்டவர்களுக்காக பல நல்ல திட்டங்களை துவக்க தீவிரமாக முயன்றுவருவதாக வெளியாகியுள்ள செய்தி மனம் மகிழச் செய்வதாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்களுக்காக திட்டங்கள்
ஜேர்மனி ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு என்பதால். பிற ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் ஜேர்மனிக்கு வருவதில் பெரிய பிரச்சினைகள் இருக்கப்போவதில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களுக்கு சில கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜேர்மனி மட்டுமின்றி பல நாடுகள் தற்போது பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிவருகின்றன. ஆகவே, பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக மற்ற நாட்டுப் பணியாளர்களை வரவேற்க அவை நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

ஜேர்மனியோ, அதற்காக புதிய சட்டம் உருவாக்கும் எல்லை வரை சென்றுவிட்டது.

வெளிநாட்டவர்களை வரவேற்க பல நடவடிக்கைகள்
அதையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட ஜேர்மன் நகரம், வெளிநாட்டவர்களுக்காக, அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத வெளிநாட்டவர்களை வரவேற்பதற்காக, பல நல்ல நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

அப்படி வெளிநாட்டவர்களுக்காக திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள ஜேர்மன் நகரம் Munich.

ஆம், Munich நகர பசுமைக் கட்சியினர், ஜேர்மனிக்கு வரும் வெளிநாட்டவர்களுக்காக ‘வரவேற்பு மையம்’ ஒன்றை உருவாக்க விரும்புகிறார்கள்.

அதாவது, சில நாடுகள், வெளிநாட்டவர்களை வரவேற்கின்றன. ஆனால், அவர்கள் வந்தபின்,

அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்கள் புதிய நாட்டில் அவர்களுக்குக் கடினமாக உள்ளன.

புது வாழ்வைத் துவக்கலாம் என சில நாடுகளுக்கு வந்த மக்கள், அமைதியாக தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்ற விடயங்களும் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.

ஆகவே, Munich நகருக்கு வரும் மக்கள் அப்படி எந்த பிரச்சினைகளையும் சந்திக்கக்கூடாது. அதாவது, அவர்கள் ஜேர்மனிக்கு வருவது மட்டுமல்ல, அங்கேயே மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழவேண்டும் என Munich நகர பசுமைக் கட்சியினர் விரும்புகிறார்கள்.

அபப்டியானால், ஜேர்மனிக்கு வருவோருக்கு, வீடு வாடகைக்கு பிடிப்பது, பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற விடயங்களை எளிதாக்கவேண்டும், அதற்கு உதவவேண்டும் இல்லையா?

ஆகவே, அப்படி வெளிநாட்டவர்களுக்கு சகல உதவிகளையும் செய்யும் ஒரு வரவேற்பு மையத்தைத்தான் Munich நகர பசுமைக் கட்சியினர் உருவாக்க விரும்புகிறார்கள் என வெளியாகியுள்ள தகவல், பெருமகிழ்ச்சியை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...