2 scaled
உலகம்செய்திகள்

ரூ.279 கொடுத்து பிரியாணி சாப்பிட்டவருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு

Share

ரூ.279 மதிப்புள்ள பிரியாணியை சாப்பிட்ட வாடிக்கையாளருக்கு ஹொட்டல் நிர்வாகம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக அளித்துள்ளது.

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசம், திருப்பதியில் ரோபோ என்ற தனியார் ஹொட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹொட்டல் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அப்போது பிரியாணி சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, ரூ. 279 கொடுத்து பிரியாணியை சாப்பிட்ட 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டோக்கன்களை பெற்றுக் கொண்டனர்.

இவர்களில் புத்தாண்டையொட்டி தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளிப்பதாக கூறியிருந்தது.

இந்நிலையில், நேற்று புத்தாண்டு அன்று ஹொட்டல் நிர்வாகி பாரத் குமார் மற்றும் அவரது மனைவி நீலிமா ஆகியோர் அந்த நபரை தேர்வு செய்தனர்.

அப்போது, திருப்பதியை சேர்ந்த ராகுல் என்பவரது டோக்கன் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது. இதுகுறித்து ஹொட்டல் நிர்வாகிகள் கூறும் போது, பிரியாணிக்கு கார் பரிசாக வழங்கும் புதுமையான திட்டத்தால் எங்களது ஹொட்டலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினர்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...