24 66a81d9935dde
உலகம்

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

Share

பிரித்தானியாவில் வேலைவாய்ப்பிற்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

பிரித்தானியாவில்(United Kingdom) விநியோக துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் Evri, 9000 பணியிடங்களுக்கு ஆட்களை இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அப்பல்லோ குளோபல் முகாமைத்துவ(Apollo Global Management) நிறுவனத்தால் பல பில்லியன் பவுண்டுகளுக்கு Evri நிறுவனம், கையகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் 9,000 புதிய பணியாளர்களுக்கு வெற்றிடம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்நிலை (online) விநியோக சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதன் பணியாளர்களை அதிகரித்து செயல்பாடுகளை விரிவுபடுத்துவதே இதன் நோக்கமாக அமைந்துள்ளது.

அஞ்சலர்கள்(couriers), கிடங்கு ஊழியர்கள்(warehouse staff) மற்றும் பிற துணைப் பணியாளர்கள் என அனைத்து நிலைகளிலும் இந்த புதிய பணியாளர் தெரிவு பிரித்தானியா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்காட்லாந்து, சஃபோக்கில்(Suffolk) உள்ள பரி செயிண்ட் எட்மண்ட்ஸ்(Bury St Edmunds), டெவானில்(Devon) உள்ள பிளைமவுத்(Plymouth) மற்றும் கேட்விக் விமான நிலையம்(Gatwick Airport) ஆகியவை முக்கிய பணியிடங்களாக கூறப்படுகின்றது.

இதில், சுமார் 8,000 அஞ்சலர்கள் மற்றும் 1,000 கிடங்கு மற்றும் துணைப் பணியாளர்கள் என மொத்தம் 9,000 பேரை இணைத்துக்கொள்ள குறித்த நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அஞ்சலர்களுக்கு மணிக்கு சராசரியாக £16.50 ஊதியம் வழங்கப்படும் என்றும் Evri நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...

14 12
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 ஆக உயர்வு!

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து...