24 65ff10c52aa38
உலகம்செய்திகள்

56 ஆண்டுகளாக இறந்த கருவை வயிற்றில் சுமந்த பெண்., கல்லாக மாறிய குழந்தை

Share

56 ஆண்டுகளாக இறந்த கருவை வயிற்றில் சுமந்த பெண்., கல்லாக மாறிய குழந்தை

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி வயிற்றில் ஸ்கேன் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பிரேசிலை சேர்ந்த இந்த 81 வயது மூதாட்டி 56 ஆண்டுகளாக இறந்த கருவை சுமந்துள்ளார். நம்புவதற்கு ஆச்சரியமாகத் தோன்றினாலும் அது உண்மைதான்.

இதற்கு முன்பு அவர் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் அதன்பிறகு அவள் வயிற்றில் இன்னொரு இறந்த கரு இருப்பதை அறியாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

டானிலா வேரா (Daniela Vera) என்ற அப்பெண் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கான சிகிச்சைக்காக முதலில் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டார்.

பின்னர், அந்த மூதாட்டிக்கு பலமுறை பரிசோதனை செய்த வைத்தியர், வயிற்றில் கல் போன்ற ஒன்று இருப்பதைக் கண்டறிந்து பாரிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்கு பரிசோதனை செய்து அதிர்ச்சி அளித்தனர்.

ஏற்கனவே ஏழு குழந்தைகளுக்கு தாயான இவர், கடந்த 1968ம் ஆண்டு கர்ப்பமாகியுள்ளார். ஆனால் இறந்துவிட்ட அந்தக் குழந்தையை கடந்த 56 ஆண்டுகளாக வயிற்றில் சுமந்து வந்துள்ளார்.

உள்ளே குழந்தையின் உடல் கல்லாக மாறியது. ஆனால் அது அவருக்கு தெரியவே இல்லை. இதை 3டி ஸ்கேன் மூலம் கண்டறிந்த வைத்திராக்கள், மூதாட்டியின் வயிற்றில் இருந்த கல் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்கு மறுநாள் ஐசியூவில் மூதாட்டி கடைசி மூச்சை விட்டுள்ளார்.

இந்த அபூர்வ ‘கல் குழந்தை’ மூதாட்டியின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வயிற்றில் இறந்த கருவை உடலால் வெளியேற்ற முடியாமல் போகும்போது, ​​அதைச் சுற்றி கால்சியம் பூச்சு உருவாகத் தொடங்குகிறது.

மெல்ல மெல்ல இறந்த கரு கடினமாகி கல்லாக மாறிவிடும். இந்த மருத்துவ நிலை லித்தோபீடியன் (lithopedion) அல்லது stone baby என்று அழைக்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...