23 65897907f0b30
உலகம்செய்திகள்

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி

Share

பிரான்ஸில் கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி

பிரான்சில் உள்ள ஏர்பஸ் (Airbus) நிறுவனம் அளித்த கிறிஸ்துமஸ் விருந்தில் சாப்பிட்ட 700 பேருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்பஸ் (Airbus). இந்த நிறுவனம், பயணிகள் போக்குவரத்து, ராணுவம் மற்றும் விண்வெளி பயன்பாட்டிற்கு விமானங்களை தயாரிக்கிறது. குறிப்பாக, ஏர்பஸ் நிறுவனம் உலகிலேயே முன்னணி ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டில் கிளை உள்ளது. அங்குள்ள நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளிக்க ஏர்பஸ் அட்லான்டிக் முடிவு செய்தனர். அதன்படி, சுமார் 2600 ஊழியர்கள் விருந்தில் பங்கேற்றனர்.

இந்த கிறிஸ்துமஸ் விருந்தானது, மேற்கு பிரான்ஸ் பகுதியில் லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டது.

இந்த விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளும் வழங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 700 ஊழியர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதனுடன் சேர்த்து தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளும் ஏற்பட்டன. இந்த விருந்தில் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஏர்பஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “நாங்கள் விருந்து வழங்கிய அனைத்து உணவு மாதிரியையும் வைத்துள்ளோம். சுகாதார துறையுடன் விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம்” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...