4 25 1 scaled
உலகம்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஆண்டொன்றிற்கு 700 பேர் மரணம்: அதிரவைக்கும் தகவல்

Share

சுவிட்சர்லாந்தில் மருந்துகளின் பக்க விளைவுகளால் ஆண்டொன்றிற்கு 700 பேர் மரணம்: அதிரவைக்கும் தகவல்

சுவிட்சர்லாந்தில், 2012ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடையில், ஒவ்வொரு ஆண்டும், 32,000 பேர் மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

Lucerne மற்றும் Zurich பல்கலைக்கழகங்கள், Zurich பல்கலை மருத்துவமனை மற்றும் Swissmedic என்னும் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

அதிக அளவில், செரிமான மண்டலம் (இரைப்பை, குடல் அழற்சி), சிறுநீரக மண்டலம் (கடுமையான சிறுநீரக செயலிழப்பு) அல்லது மன /நடத்தை நிலை (ஓபியாய்டு சார்பு போன்றவை) போன்ற பக்க விளைவுகளே கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், ஆண்டொன்றிற்கு 2.2% பேர் அல்லது சுமார் 700 பேர் மருத்துவமனையிலேயே இறந்துவிடுகிறார்கள் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...