3 17 scaled
உலகம்செய்திகள்

7 வயது மகளுக்கு நேர்ந்த வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

Share

7 வயது மகளுக்கு நேர்ந்த வன்கொடுமை.., உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

இந்திய மாநிலம், கேரளாவில் 7 வயது மகள் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவர் தனது 7 மற்றும் 11 வயது மகள்களுடன் கணவரை பிரிந்து மற்றொரு ஆணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் 7 வயது மகளை ஆண் நண்பர் பல முறை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதுகுறித்து, 7 வயது மகள் தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு, இது பொதுவான விஷயம் என்றும், யாரிடமும் இது பற்றி தெரிவிக்கக் கூடாது கூடாது என்றும் சிறுமியிடம் தாய் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பல முறை 7 வயது மகளை வன்கொடுமை செய்ய அந்த ஆண் நண்பருக்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதனால், 7 வயது சிறுமி தனது 11 வயது சகோதரியிடம் தனக்கு நடந்த கொடுமையை பற்றி கூறியுள்ளார். அதற்கு, தனக்கும் இதுபோல வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், இரண்டு சிறுமிகளும் தனது பாட்டி வீட்டுக்கு தப்பித்துச் சென்று நடந்தது குறித்து கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த பாட்டி பொலிஸில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, சிறுமிகளின் தாய் மற்றும் அவருடன் வாழ்ந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் குற்றவாளியான ஆண் நண்பர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், சிறுமிகளின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, விரைவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 6 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...