3 46
உலகம்செய்திகள்

ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை: தீவிர கண்காணிப்பில் கனடா

Share

ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை: தீவிர கண்காணிப்பில் கனடா

கனடாவின் (Canada) எல்லைக்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத அமெரிக்க (US) குடியேற்றவாசிகளை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆறு பேரும் கடுமையான குளிரான காலநிலையிலும் நடந்தே எல்லையை கடந்துள்ளதாக அந்நாட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எமர்சன் பகுதிக்கு அருகே நடந்தே எல்லையை கடக்கும் சிலரை கனேடிய அதிகாரிகள் விமானம் மூலம் பார்வையிட்டுள்ள நிலையில் அவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதன்போது, மீட்கப்பட்ட குடியேற்றவாசிகளில் சிலர் உறைபனி வெப்பநிலைக்கு ஏற்றவாறான ஆடைகளை அணியவில்லை என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நோயாளர் காவு வண்டிகள் அழைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கனடாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன், அவர் தனது கோரிக்கைகளுக்கு ஏற்றவாறான வகையில் வரிகளை விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கனடா ட்ரம்பின் இக்கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான தனது, வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது.

இந்நிலையில், பல நாடுகளை சேர்ந்த ஏனைய சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் அமெரிக்காவை சேர்ந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....