3 46
உலகம்செய்திகள்

ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை: தீவிர கண்காணிப்பில் கனடா

Share

ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை: தீவிர கண்காணிப்பில் கனடா

கனடாவின் (Canada) எல்லைக்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத அமெரிக்க (US) குடியேற்றவாசிகளை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆறு பேரும் கடுமையான குளிரான காலநிலையிலும் நடந்தே எல்லையை கடந்துள்ளதாக அந்நாட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எமர்சன் பகுதிக்கு அருகே நடந்தே எல்லையை கடக்கும் சிலரை கனேடிய அதிகாரிகள் விமானம் மூலம் பார்வையிட்டுள்ள நிலையில் அவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

இதன்போது, மீட்கப்பட்ட குடியேற்றவாசிகளில் சிலர் உறைபனி வெப்பநிலைக்கு ஏற்றவாறான ஆடைகளை அணியவில்லை என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நோயாளர் காவு வண்டிகள் அழைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கனடாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அத்துடன், அவர் தனது கோரிக்கைகளுக்கு ஏற்றவாறான வகையில் வரிகளை விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கனடா ட்ரம்பின் இக்கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான தனது, வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது.

இந்நிலையில், பல நாடுகளை சேர்ந்த ஏனைய சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் அமெரிக்காவை சேர்ந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...