rtjy 78 scaled
உலகம்செய்திகள்

கொல்லப்பட்ட 9000 பொதுமக்கள்: உக்ரைன் போரின் 500வது நாளில் ஐ.நா

Share

கொல்லப்பட்ட 9000 பொதுமக்கள்: உக்ரைன் போரின் 500வது நாளில் ஐ.நா

உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9000 பொதுமக்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு காரணங்களுக்காக உக்ரைன் மீது தாக்குதலை தொடங்குவதாக அறிவித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீதான முழுநீளப் போரை ரஷ்யா அறிவித்தது.

இதுவரை நடந்துள்ள போர் தாக்குதலில் ரஷ்யாவின் மீது பல்வேறு உலக நாடுகள் போர் அத்துமீறல் குற்றச்சாட்டை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் கடந்த ஆண்டு தொடங்கிய இந்த போரானது, ஆண்டுகளை கடந்து தற்போது 500 நாட்களை தொட்டுள்ளது.

இந்த 500 நாட்களும் ரஷ்யா உக்ரைன் மீது வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல், அல்லது ட்ரோன் தாக்குதல் போன்ற ஏதாவது ஒரு வகை தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் லட்சக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போர் 500வது நாளை தொட்டு இருப்பதை மேற்கோள் காட்டி, உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRMMU) வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இதுவரை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 500 குழந்தைகள் உட்பட 9000 பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த இறப்பு எண்ணிக்கையானது கூடுதலாக இருக்கும் என்று ஐ.நா பிரதிநிதி முன்னர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 95099f5203
செய்திகள்இலங்கை

கொழும்பில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன்: வரவு செலவுத் திட்ட அமர்வுக்கு மத்தியில் உணர்வெழுச்சி!

தேச விடுதலைக்காகப் போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 21)...

images 1 11
செய்திகள்இலங்கை

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினோம்: சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் பணியவில்லை – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்....

image e0f1498f29
செய்திகள்இலங்கை

தமிழ் தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்: வேலணை சாட்டி துயிலும் இல்லத்தில் ஈகச் சுடரேற்றல் நிகழ்வு!

தேச விடுதலைக்காக போராடி மடிந்த வீர மறவர்களை நினைவுகூரும் தமிழ் தேசிய மாவீரர் வாரத்தின் ஆரம்ப...

Archchuna Ramanathan 1200px 24 11 22
செய்திகள்அரசியல்இலங்கை

பாராளுமன்ற உணவகத்தில் எம்.பி.க்கு கொலை மிரட்டல்: முஹம்மட் பைசல் மீது அர்ச்சுனா எம்.பி. குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால், இன்று (நவ 21)...