8 33
உலகம்செய்திகள்

கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற 50,000 சர்வதேச மாணவர்கள் எங்கே?

Share

கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற 50,000 சர்வதேச மாணவர்கள் எங்கே?

கல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்ற 50,000 மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லவில்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

2024ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கனடாவிலுள்ள கல்லுரிகளில் சேர்வதற்காக கல்வி அனுமதி பெற்றவர்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை என அந்தக் கல்லூரிகள் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் தெரிவித்துள்ளன.

கல்வி கற்பதற்காக அனுமதி பெற்றுவிட்டு கல்லூரிகளுக்கு வராத அந்த மாணவர்கள் எங்கே சென்றிருக்கக்கூடும் என்பது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான வழியாக, கனடாவின் கல்வி அனுமதியை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும் என சிலர் தெரிவிக்கிறார்கள்.

கல்வி அனுமதி பெற்ற அந்த மாணவர்கள், கனடாவில் வேலை தேடுவதற்காகவோ அல்லது கனேடிய குடியிருப்பு அனுமதி பெறுவதற்காகவோ, ஒரு வாய்ப்பாக அதை பயன்படுத்திக்கொண்டிருக்கலாம் என முன்னாள் ஃபெடரல் பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவிக்கிறார்.

முறைப்படி அனுமதி பெறாத வெளிநாட்டு ஏஜண்டுகள் அல்லது புலம்பெயர்தல் ஆலோசகர்கள் இந்த கல்வி அனுமதிகளை தவறாக பயன்படுத்தக்கூடும் என்கிறார் புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவர்.

ஆக, கல்வி அனுமதி பெற்றுவிட்டு, கல்லூரிக்குச் செல்லாமல், அதை வேலை, அமெரிக்கா செல்லுதல் போன்ற விடயங்களுக்காக பயன்படுத்துவதைத் தடுக்க, சர்வதேச மாணவர்களை முன்கூட்டியே கல்லூரிக் கட்டணம் செலுத்தச் செய்வது போன்ற நடவடிக்கைகளை அறிமுகம் செய்யவேண்டும் என துறைசார் நிபுணர்கள் அரசை வலியுறுத்தியுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...