tamilnaadi 140 scaled
உலகம்செய்திகள்

ஒரே நாட்டில் பட்டினியின் விளிம்பில் 5 மில்லியன் மக்கள்

Share

ஒரே நாட்டில் பட்டினியின் விளிம்பில் 5 மில்லியன் மக்கள்

பட்டினியின் விளிம்பில் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சூடானின் சண்டையிடும் பிரிவுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏறக்குறைய ஐந்து மில்லியன் சூடான் மக்கள் வரவிருக்கும் மாதங்களில் ஆபத்தான உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்றே ஐ.நா எச்சரித்துள்ளது.

சூடானில் கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தளபதி Abdel Fattah al-Burhan மற்றும் முன்னாள் தளபதி Mohamed Hamdan Daglo ஆகியோரின் படைகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி போர் நீடித்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமும் முடங்கியது. போர் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 18 மில்லியன் சூடான் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 730,000 சூடான் குழந்தைகள், தார்பூரில் மட்டும் 240,000 க்கும் அதிகமானோர் உட்பட கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் சூடான் துறைமுகத்தில் போதுமான உதவி இருப்புக்கள் உள்ளதாகவும், அங்கு இருந்து தேவைப்படும் மக்களுக்கு உதவி எடுத்துச் செல்வதே சிக்கலான விடயம் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் 14 மில்லியன் சிறார்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும், நான்கு மில்லியன் சிறார்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...