tamilnaadi 140 scaled
உலகம்செய்திகள்

ஒரே நாட்டில் பட்டினியின் விளிம்பில் 5 மில்லியன் மக்கள்

Share

ஒரே நாட்டில் பட்டினியின் விளிம்பில் 5 மில்லியன் மக்கள்

பட்டினியின் விளிம்பில் இருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சூடானின் சண்டையிடும் பிரிவுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏறக்குறைய ஐந்து மில்லியன் சூடான் மக்கள் வரவிருக்கும் மாதங்களில் ஆபத்தான உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என்றே ஐ.நா எச்சரித்துள்ளது.

சூடானில் கிட்டத்தட்ட ஓராண்டுகாலமாக போர் நீடித்து வருகிறது. ராணுவ தளபதி Abdel Fattah al-Burhan மற்றும் முன்னாள் தளபதி Mohamed Hamdan Daglo ஆகியோரின் படைகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி போர் நீடித்து வருகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், உள்கட்டமைப்பும் அழிக்கப்பட்டு நாட்டின் பொருளாதாரமும் முடங்கியது. போர் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு சிக்கலும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 18 மில்லியன் சூடான் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 730,000 சூடான் குழந்தைகள், தார்பூரில் மட்டும் 240,000 க்கும் அதிகமானோர் உட்பட கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் சூடான் துறைமுகத்தில் போதுமான உதவி இருப்புக்கள் உள்ளதாகவும், அங்கு இருந்து தேவைப்படும் மக்களுக்கு உதவி எடுத்துச் செல்வதே சிக்கலான விடயம் என்றும் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் 14 மில்லியன் சிறார்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும், நான்கு மில்லியன் சிறார்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...