8 18
உலகம்செய்திகள்

பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள்

Share

பெற்றோருக்கான விசா வழங்கும் முக்கிய 5 நாடுகள்

குடியுரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கான விசா வழங்கி, தங்களுடன் ஒன்றாக வாழ்வதற்கான வாய்ப்புகளை முக்கியமான 5 நாடுகள் வழங்குகின்றன.

அந்த வகையில், அவுஸ்திரேலியா (Ausralia), கனடா (Canada), நியூசிலாந்து (New Zealand), பிரித்தானியா (United Kingdom) மற்றும் ஜேர்மனி (Germany) ஆகிய நாடுகளே பெற்றோருக்கான விசா வழங்குகின்றன.

அவுஸ்திரேலியா பெற்றோருக்கான இரண்டு வகை விசாக்களை வழங்குகிறது.

Contributory Parent Visa: இது விலை உயர்ந்ததாக இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் குறைவாக இருக்கும்.

Non-Contributory Parent Visa: இது சற்று குறைந்த செலவில் இருக்கும், ஆனால் செயல்படுத்தும் நேரம் நீண்டதாக இருக்கும்.

கனடா “Parent and Grandparent Super Visa” எனும் விசாவை வழங்குகிறது.

இது பெற்றோர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கனடாவில் தங்க அனுமதி அளிக்கிறது. மேலும் ஒவ்வொரு முறை 2 ½ ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக தங்க முடியும்.

நியூசிலாந்தில் “Parent Resident Visa” வழங்கப்படுகிறது.

இதில், குடியுரிமை பெற்றவர் அல்லது நிரந்தர குடியுரிமையாளர் தங்கள் பெற்றோரை கொண்டு வர அனுமதி பெறுவர். பிள்ளையின் நிதி நிலைமையின் அடிப்படையில் பெற்றோர் விசா வழங்கப்படும்.

பிரித்தானியாவில், “Parent of a British Child Visa” அல்லது “Elderly Dependent Visa” வழங்கப்படுகிறது.

இதில் பெற்றோர் அல்லது பெரியவராக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் குழந்தைகளின் அருகில் இருப்பதற்கான விசாவை பெற முடியும்.

ஜேர்மனியில் “Family Reunification Visa” மூலம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ முடியும்.

இந்த விசா பெறுவதற்கு குழந்தைகள் ஜேர்மனியில் வசித்து பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.

இந்த விசாக்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் சேர்ந்து வாழ உதவுகின்றன, மேலும் குடும்ப உறவை மேம்படுத்துகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...