உலகம்செய்திகள்

அமெரிக்க சார்பு நாட்டை இலக்குவைத்த ஜிஹாதிஸ் குழு: 40 இராணுவ வீரர்கள் பலி

Share
9 39
Share

அமெரிக்க சார்பு நாட்டை இலக்குவைத்த ஜிஹாதிஸ் குழு: 40 இராணுவ வீரர்கள் பலி

வட மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள அமெரிக்க சார்பு நாடான சாடில்(Chad) உள்ள இராணுவ தளத்தின் மீது ஜிஹாதிஸ்ட்(jihadist) அமைப்பால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தமி வெளியிட்டுள்ளன.

 

குறித்த தாக்குதல் நேற்று(28.10.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி மஹாமத் இட்ரிஸ் டெபி இட்னோ, சம்பவ இடத்திற்குச் சென்று களநிலவரங்களை ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 

தாக்குதலை மேற்கொண்ட ஜிஹாதிஸ்ட் அமைப்பின் போகோ ஹராம் உறுப்பினர்கள் சாடின் காரிஸனைக் கைப்பற்றியதோடு, ஆயுதங்களைக் கைப்பற்றி, கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களை எரித்துவிட்டு வெளியேறியபோது இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.

 

ஜிஹாதி கிளர்ச்சி குழு ஆப்பிரிக்க நாடுகளின் இராணுவம் மற்றும் பொதுமக்கள் மீது வழக்கமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

 

ஜிஹாதி கிளர்ச்சி குழு 2009 இல் நைஜீரியாவில் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கியது. 40,000 க்கும் அதிகமான மக்கள் இதில் கொல்லப்பட்டனர். மற்றும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

 

பின்னர் இந்த அமைப்பு அண்டை நாடுகளுக்கும் பரவியது. மார்ச் 2020 இல்,போஹோமா தீபகற்பத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 100 இராணுவ வீரர்கள் இறந்தபோது, சாடியன் இராணுவம் பிராந்தியத்தில் அதன் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

 

இந்த தாக்குதல் அப்போதைய ஜனாதிபதி இட்ரிஸ் டெபி இட்னோவினால், ஜிஹாதிகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்க தூண்டியது.

 

அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுக்கு ஆதரவான அமைப்புகளின் மையமாக மாறியுள்ள ஜிஹாதிகளை எதிர்த்துப் போராட சாட் இராணுவம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகளுடன் கூட்டினைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...