24 66ad4bfcaf223
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் மூடப்பட்ட 4,000 வழிபாட்டுத் தலங்கள்

Share

வெளிநாடொன்றில் மூடப்பட்ட 4,000 வழிபாட்டுத் தலங்கள்

ருவாண்டாவில்(Rwanda) 4,000க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதத்தில் ருவாண்டாவில் 4,000க்கும் அதிகமான வழிபாட்டுத் தளங்கள், குறிப்பாக சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, குறிப்பாக போதுமான ஒலி புகார் அமைப்பு இல்லாதது போன்ற காரணங்களைக் காட்டி அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த வழிபாட்டுத் தளங்கள் பல குகைகள், ஆறுகளின் கரைகள் போன்ற சாதாரண மற்ற இடங்களில் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் வழிபாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதே தங்களின் நோக்கம் என்றும், மதச் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் வழிபாட்டுத் தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 2018இல் இயற்றப்பட்ட சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இதில் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடுகள், பாதுகாப்பான சூழல் மற்றும் சத்தங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை இந்த சட்டத்தில் உள்ளன. 2018-ல் நடந்த முந்தைய நடவடிக்கையில் சுமார் 700 தேவாலயங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...