tamilni 41 scaled
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

Share

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

நைஜீரியாவில் உள்ள போகோஹராம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் ஒன்றில் 37 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் போகோஹராம் இயக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தையடுத்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து கிராம மக்கள் பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டு அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
01 34
செய்திகள்உலகம்

ஈரானிய பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல்: அமெரிக்க, இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு ஐஆர்ஜிசி எச்சரிக்கை!

ஈரானின் தெஹ்ரானில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (IUST) மீது அமெரிக்க மற்றும்...

01 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டணப் பட்டியல்: காட்சிப்படுத்தத் தவறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரம் ரத்து!

இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலைப் பயணிகள் தெளிவாகப்...

Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...