tamilni 41 scaled
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

Share

நைஜீரியாவில் 37 கிராம மக்கள் படுகொலை

நைஜீரியாவில் உள்ள போகோஹராம் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் ஒன்றில் 37 கிராம மக்கள் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கெய்டாம் மாவட்டம் குரோகயேயா கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் போகோஹராம் இயக்கத்தினர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தையடுத்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து கிராம மக்கள் பலியானோர் உடல்களை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச்சென்றபோது பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் மேலும் 20 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டு அரசு அவசர பாதுகாப்பு கூட்டத்தைக் கூட்டி தாக்குதல் நடந்த பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் வடகிழக்கு, வடமேற்கு, மத்திய பிராந்தியங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...