tamilni 324 scaled
உலகம்செய்திகள்

3600 வருட பழைய Lipstick! ஈரானில் கிடைத்த அழகின் வரலாறு

Share

3600 வருட பழைய Lipstick! ஈரானில் கிடைத்த அழகின் வரலாறு

தென்கிழக்கு ஈரானில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம்(lipstick) கண்டுபிடிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஈரானில் உள்ள கெர்மன் மாகாணத்தின் ஜிரோஃப்ட் பகுதியில் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் பழமையான லிப்ஸ்டிக் என நம்பப்படுகிறது. இந்த லிப்ஸ்டிக் ஒரு பண்டைய பெண்ணின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மெழுகு, விலங்கு கொழுப்பு மற்றும் களிமண் ஆகியவற்றின் கலவையாகும். லிப்ஸ்டிக் சிவப்பு நிறத்தில் இருந்தது, இது ஒரு வகை ஈய சாயத்தால் செய்யப்பட்டது.

கிமு 3 ஆம் மில்லினியத்தைச் சேர்ந்த பல கல்லறைகள் 2001 ஆம் வருடம் ஹலீல் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக பல கல்லறைகளில் இருந்த கலைப் பொருட்கள் வெளிவந்தன.

அவற்றில் பல பொதுமக்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் இந்த பழமையான லிப்ஸ்டிக் அருங்காட்சியகம் சென்றுடைந்துள்ளது.

பல கொள்ளை சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்து இருப்பதால் லிப்ஸ்டிக் தோன்றிய இடம் குறித்து சரியாக தெரியவில்லை. இருப்பினும் இது உலோக நாகரிக காலத்தை சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பண்டைய கால லிப்ஸ்டிக்கானது தற்கால லிப்ஸ்டிக் தயாரிப்பு முறைகளுடன் ஒத்துப் போவதாக உள்ளது, இது பழங்கால சமூகத்தின் ஒப்பனை நடைமுறைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...