உலகம்செய்திகள்

3600 வருட பழைய Lipstick! ஈரானில் கிடைத்த அழகின் வரலாறு

Share
tamilni 324 scaled
Share

3600 வருட பழைய Lipstick! ஈரானில் கிடைத்த அழகின் வரலாறு

தென்கிழக்கு ஈரானில் சுமார் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம்(lipstick) கண்டுபிடிக்கப்பட்டது.

தென்கிழக்கு ஈரானில் உள்ள கெர்மன் மாகாணத்தின் ஜிரோஃப்ட் பகுதியில் 3600 ஆண்டுகளுக்கு பழமையான சிவப்பு உதட்டுச்சாயம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகவும் பழமையான லிப்ஸ்டிக் என நம்பப்படுகிறது. இந்த லிப்ஸ்டிக் ஒரு பண்டைய பெண்ணின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மெழுகு, விலங்கு கொழுப்பு மற்றும் களிமண் ஆகியவற்றின் கலவையாகும். லிப்ஸ்டிக் சிவப்பு நிறத்தில் இருந்தது, இது ஒரு வகை ஈய சாயத்தால் செய்யப்பட்டது.

கிமு 3 ஆம் மில்லினியத்தைச் சேர்ந்த பல கல்லறைகள் 2001 ஆம் வருடம் ஹலீல் நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக பல கல்லறைகளில் இருந்த கலைப் பொருட்கள் வெளிவந்தன.

அவற்றில் பல பொதுமக்களால் எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும் இந்த பழமையான லிப்ஸ்டிக் அருங்காட்சியகம் சென்றுடைந்துள்ளது.

பல கொள்ளை சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்து இருப்பதால் லிப்ஸ்டிக் தோன்றிய இடம் குறித்து சரியாக தெரியவில்லை. இருப்பினும் இது உலோக நாகரிக காலத்தை சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பண்டைய கால லிப்ஸ்டிக்கானது தற்கால லிப்ஸ்டிக் தயாரிப்பு முறைகளுடன் ஒத்துப் போவதாக உள்ளது, இது பழங்கால சமூகத்தின் ஒப்பனை நடைமுறைகளுக்கு சான்றாக அமைந்துள்ளது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...