கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி! இருவர் படுகாயம்
கனடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
மனிடோபாவின் (Manitoba) வின்னிபெக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் வயது வந்த ஆண், பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இருவரும் ஆபத்தான ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை, எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பொலிஸார் கூறும்போது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் விசாரணை உருவாகும்போது மேலும் விவரங்கள் பகிரப்படும் என்றனர்.
Comments are closed.