6 11 scaled
உலகம்செய்திகள்

கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி! இருவர் படுகாயம்

Share

கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி! இருவர் படுகாயம்

கனடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மனிடோபாவின் (Manitoba) வின்னிபெக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அதிகாலையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது.

இதில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் வயது வந்த ஆண், பெண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய இருவரும் ஆபத்தான ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை, எனினும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பொலிஸார் கூறும்போது பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் விசாரணை உருவாகும்போது மேலும் விவரங்கள் பகிரப்படும் என்றனர்.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....