7 14 scaled
உலகம்செய்திகள்

25 வயதிற்குள் திருமணம் செய்ய ஊக்குவிக்கும் அரசு!

Share

25 வயதிற்குள் திருமணம் செய்ய ஊக்குவிக்கும் அரசு!

சீனாவில், 25 அல்லது அதற்கு குறைவான வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

6 தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துள்ள பின்னணியில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

சீனாவில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதற்கு, சரியான வயதில் திருமணம், குழந்தைப்பேறு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் அரசு இந்த அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

6 தசாப்தங்களுக்குப் பிறகு, சீனாவின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்து வருகிறது. முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணமகள் 25 அல்லது அதற்கு குறைவான வயதுடைய சீன தம்பதிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

சாங்ஷன் கவுண்டியின் அதிகாரப்பூர்வ வெச்சாட் கணக்கில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 1,000 யுவான் (இலங்கை பணமதிப்பில் ரூ.44,340) வெகுமதி அளிக்கப்படுகிறது.

சீனாவில் சட்டப்பூர்வ திருமண வயது ஆண்களுக்கு 22 ஆகவும், பெண்களுக்கு 20 ஆகவும் உள்ளது. தற்போது சீனாவில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசாங்க புள்ளிவிவரங்கள் 2022-ல் திருமண விகிதம் 6.8 மில்லியனாக இருந்தது. 2021 ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டு 800,000 குறைவான திருமணங்கள் நடந்துள்ளன.

சீனாவின் கருவுறுதல் விகிதம் உலகளவில் குறைந்துள்ளது. 2022-ல், இது 1.09 என்ற சாதனை அளவில் சரிந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.

குழந்தை பராமரிப்பு செலவுகள் மற்றும் பெண்களின் தொழில் முட்டுக்கட்டை பல பெண்களை குழந்தை பெறுவதை நிறுத்தியுள்ளது. சீனாவின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் பின்னணியில் அங்குள்ள இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....