ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளும் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக இன்றும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஈரானிய இராணுவ தளபதிகளில் ஒருவரான அலி சட்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
மேலும், ஈரானின் இராணுவம் மற்றும் அணுசக்தி நிலையங்களுக்கு இஸ்ரேல் ஏற்படுத்திய சேதங்களைக் காட்டும் வகையிலான செயற்கைக்கோள் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.